×

உலககோப்பைக்கு கங்குலி தேர்வு செய்துள்ள இந்திய அணி

கொல்கத்தா: உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றும் முனைப்பில் தயாராகி வருகிறது. இந்நிலையில் வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியின் ஆடும் லெவனில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார். தனது அணியை வெளியிடுவதற்கு முன்பாக பேசிய அவர் “ஆசிய கோப்பைக்கான அணியில் அக்சர் படேலை அவர் பேட்டிங் செய்யும் திறன் காரணமாக சாஹலுக்கு முன்னே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

எனவே இது ஒரு நல்ல தேர்வு என்று நான் நினைக்கிறேன். யாராவது காயம் அடைந்தால் சாஹல் அணிக்குள் வர முடியும். இது 17 பேர் கொண்ட அணி எப்படியும் இரண்டு பேரை வெளியேற்றி ஆகவேண்டும். பேட்டர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் திலக் வர்மா அவரது இடத்தில் உள்ளே வர முடியும். வேகப்பந்து வீச்சாளர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் பிரசித் கிருஷ்ணா உள்ளே வருவார். இதுபோலவே சுழற் பந்துவீச்சாளர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் சாஹல் வருவார் என்றார். கங்குலி தேர்வு செய்துள்ள அணி: ரோகித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷன், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.

The post உலககோப்பைக்கு கங்குலி தேர்வு செய்துள்ள இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Ganguli ,World Cup ,Kolkata ,World Cup Cricket ,India ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...